No results found

    கர்த்தருடைய வார்த்தையின் வல்லமை


    கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன.

    கர்த்தருடைய வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது வேதாகமம். கர்த்தருடைய வார்த்தைகளோடு இணைந்து அதில் உள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகும்போது நம்மை உருமாற்ற அவருடைய வார்த்தைகள் உதவுகின்றன. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், ஆண்டவருடைய வார்த்தைகளினால் வேதாகமம் நிறைந்து இருக்கிறது.

    இது ஒரே புத்தகம் தான் என்றாலும், ஆனால் அதில் கடவுள், நாம் அவரை பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு கிடைக்கும் இரட்சிப்பைப்பற்றியும், நாம் இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியும், அவருடைய விருப்பத்தை பற்றியும், மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நமக்கு விவரிக்கிறார்.

    உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருந்தது (சங்கீதம் 119:105). இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய கடவுளுக்கு தனி நபரின் வாழ்க்கையில் இடைப்பட்டு அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமென்ன?. நாம் பெரிய பதவியில் இருந்தாலும், கல்வி மானாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய உச்சத்தை எட்டி இருந்தாலும், நல்ல குடும்ப வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு வெற்றிடத்தை பூர்த்தி செய்ய கடவுளால் மட்டுமே இயலும்.

    அவருடைய வார்த்தை அதற்கு உறுதுணையாய் நிற்கும். மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4). ஒரு தனிமனிதனை நண் பனாக ஏற்று கொள்ள, நாம் அவருடைய கடந்த கால வாழ்க்கை, சுற்றுப்புறம் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம்.

    பின்னர் தான் நண்பராக ஏற்றுக்கொள்கிறோம். அதே போல கடவுளுக்கு நம்மை பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் நமக்கு கடவுளை பற்றி என்ன தெரியும்? அதற்கு அவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுப்பதே ஒரே வழி. அப்பொழுது தான் நட்பின் ஆழம் பலப்படும். ஆமென்! 

    Previous Next

    نموذج الاتصال