No results found

    கவுமாரி அம்மன் காயத்ரி மந்திரம்


    சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

    கவுமாரி பாடல் :

    ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்

    சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி

    ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி

    ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

    காயத்ரி :

    ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;

    சக்தி ஹஸ்தாயை தீமஹி;

    தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

    தியான ஸ்லோகம் :

    சதுர்புஜா த்ரிநேத்ரா

    சரக்த வஸ்த்ர சமந்விதா;

    ஸர்வாபரண ஸம்யுக்தா

    வாசிகா பக்த காகுடீ;

    ஸத்தி குக்குட ஹஸ்தாச

    வரதாபய பாணிநீ;

    மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்

    உதும்பர த்ருமாஸ்ரிதா

    கௌமாரீ சேதி விக்யர்தா,

    நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

    மூல மந்திரம் :

    ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

    Previous Next

    نموذج الاتصال