No results found

    திரு அருணகிரிநாதர் அருளிய சேவல் விருத்தம்

     


    1. உலகிலநுதின 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல

       உரியபர கதிதெ ரியவே


    உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்

       இருள்கள்மிடி கெட அருளியே


    கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு

       கடினமுற வரில் அவைகளைக்


    கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற

       கைக்கொட்டி நின்றா டுமாம்


    மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்

       மடியஅயில் கடவு முருகன்


    மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற

       வரிசையின மகளவ ளுடன்


    சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்

       சிறுவன்அயன் வெருவ விரகிற்


    சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்

       சேவற் றிருத்துவசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு 


     2. எரியனையவியன் 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம

       ராட்சதர்கள் மிண்டுகள் செயும்


    ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை

       ஈனப் பசாசு களையும்


    கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்

       ககனமுற நிமிரும் வெங்கட்


    கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க்

       கரத்தடர்த் துக்கொத் துமாம்


    தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி

       சமணர்கிடு கிடென நடனம்


    தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய

       சரணஅழ கொடுபுரி யும்வேள்


    திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்

       தெரியும்அரன் உதவு குமரன்


    திமிரதின கரமுருக சரவண பவன்குகன்

       சேவற் றிருத்து வசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு  


     3. கரிமுரட்டடிவலை 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற்

       களையிறுக் கியு முறைத்துக்


    கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக்

       காலத்தில் வேலு மயிலும்


    குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக்

       குரலொலித் தடிய ரிடரைக்


    குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி

       வட்டத்தில் முட்ட வருமாம்


    அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற்

       பனமுறைத் ததமி கவுமே


    வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித்

       தவனிமெய்த் திட அருளதார்


    சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச்

       சிவிகைபெற் றினிய தமிழைச்


    சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற்

       சேவற் றிருத்து வசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு  


     4. அச்சப்படக்குரல் 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல

       றிக்கொட்ட மிட்டம ரிடும்


    அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி

       அறுகுழை களைக்கொத் தியே


    பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்

       இட்டுக் கொதித்து விறலே


    பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்

       பெறக்கொக் கரித்து வருமாம்


    பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி

       பொற்றைக் கறுத் தயில்விடும்


    புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல்

       புகழ்ச்செட்டி சுப்ர மணியன்


    செச்ைப் புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி

       தித்திக்கு முத்த மிழினைத்


    தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்

       சேவற் றிருத்து வசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு 


     5. தானா யிடும்பு 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    தானா யிடும்புசெயு மோகினி இடாகினி

       தரித்தவே தாளபூதம்


    சருவசூ னியமுமங் கிரியினா லுதறித்

       தடிந்துசந் தோடமுறவே


    கோனாகி மகவானும் வானாள வானாடர்

       குலவுசிறை மீளஅட்ட


    குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்

       கொட்டியெட் டிக்கூவுமாம்


    மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு

       மாதேவ னற்குருபரன்


    வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்

       வாழ்நாள் அனைத்தும் அவனாம்


    சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய்

       தேவாதி கட்கரசுகட்


    டேனான மைக்கடலின் மீனான வற்கினியன்

       சேவற் றிருத்து வசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு 


     6. பங்கமா கியவிட 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    பங்கமா கியவிட புயங்கமா படமது

       பறித்துச் சிவத்தருந்திப்


    பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி

       பச்சைக் கலாப மயிலைத்


    துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு

       துடரும் பிரேத பூதத்


    தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்

       துண்டப் படக் கொத்துமாம்


    மங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி

       வஞ்சிநான் முகிவராகி


    மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்

       மகிழ அமுதுண்ட பாலன்


    செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னுநர

       சிங்கமாய் இரணியனுடல்


    சிந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்

       சேவற் றிருத் துவசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு 


     7. வீறான காரிகதி 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    வீறான காரிகதி முன்னோடி பின்னோடி

       வெங்கட் குறும்புகள் தரும்


    விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்

       வெம்பேய் களைத்துரத்திப்


    பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்

       பேசியுச் சாடனத்தாற்


    பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்

       பிய்ச்சுக் களித்தாடுமாம்


    மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்

       மகோதரம் பெருவியாதி


    வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான

       வல்லபிணி களைமாற்றியே


    சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்

       சித்தத் திருக்கு முருகன்


    சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்

       சேவற் றிருத் துவசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு  


     8. வந்து ஆர்ப்பரிக்கும் 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்

       வலியதூ துவர்ப்பில்லி பேய்


    வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட

       வாயினும் காலினாலும்


    பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம்

       பவளமா கதிகாசமாப்


    பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்

       பார்த்தன் புறக்கூவுமாம்


    முந்தா கமப்பலகை சங்காத மத்தர்தொழ

       முன்பேறு முத்தி முருகன்


    முதுகா னகத்தெயினர் பண்டோ டயிற்கணை

       முனிந்தே தொடுத்த சிறுவன்


    சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு

       சித்தர்க் கிரங்கறுமுகன்


    செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன்முடி குற்றி

       சேவற் றிருத் துவசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு 


     9. உருவாய் எவர் 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்

       உளதாய் உயிர்க் குயிரதாய்


    உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம

       ஒளியாய் அருட்பொருளதாய்


    வருமீச னைக்களப முகனா தரித்திசையை

       வலமாய் மதிக்க வருமுன்


    வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்

       வைகுமயி லைப்புகழுமாம்


    குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக்

       குன்றுதோ றாடல்பழனம்


    குழவுபழ முதிர்சோலை ஆவினன் குடிபரங்

       குன்றிடம் திருவேரகம்


    திரையாழி முத்தைத் தரங்கக்கை சிந்தித்

       தெறித்திடுஞ் செந்தி னகர்வாழ்


    திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற

       சேவற் றிருத் துவசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு  


     10. மகரசல நிதி 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற

       மலைகள்கிடு கிடுகிடெனவே


    மகுடகுட வடசிகரி முகடுபட படபடென

       மதகரிகள் உயிர்சிதறவே


    ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்

       கர்ச்சித் திரைத்தலறியே


    காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற

       கைக்கொட்டி நின்றாடுமாம்


    சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி

       துடியிடைய னகையசலையாள்


    சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை

       இபவநிதை துணைவனென திதயநிலையோன்


    திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட

       செக்கண செகக்கணஎனத்


    திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்

       சேவற் றிருத் துவசமே.


     செய்யுள் முதற்குறிப்புப் பட்டியலுக்கு  


     11. பூவிலியன் வாசவன் 

      (பொருளுக்கு தலைப்பில் சொடுக்கவும்)


    பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்

       பூசனைசெய் வோர்மகிழவே


    பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு

       போகபதி னாலுலகமும்


    தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு

       தானதவ நூல்தழையவே


    தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு

       கொட்டிக் குரற்பயிலுமாம்


    காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு

       காடவிகள் பரவுநடனக்


    காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்

       கனகமயில் வாகனனடற்


    சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு

       சிகாமணி சரோருகமுகச்


    சீதள குமாரகிரு பாகர மனோகரன்

       சேவற் றிருத் துவசமே.

    Previous Next

    نموذج الاتصال