No results found

    வீடுகளில் மூலிகை செடிகள் வளர்க்க மானியம்


    தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள மூலிகை செடிகளை எளிதில் வீடுகளில் வளர்க்கும் வண்ணம் தோட்டக்கலைத் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 வகையான மூலிகைச் செடிகள் (துளசி, கற்பூரவல்லி திருநீற்றுப்பச்சிலை ஆடாதொடை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா, பிரண்டை, கற்றாழை. கீழாநெல்லி) அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2.25 லட்சம் ஒதுக்கீட்டில் 300 தளைகள் மாவட்ட இலக்கீடாக பெறப்பட்டுள்ளது.

    மொத்த விலை ரூ.1500-க்கு 20 மூலிகை செடிகள், 10 செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் அடங்கிய தளை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

    தளை ஒன்றிற்கு ரூ.750 பயனாளியின் பங்குத் தொகையாக வசூலிக்கப்படும்.

    ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஒரு தளை பெற தகுதியுடையவர்.

    இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து www.tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    மேலும், பயனாளிகள் திட்டப் பயன்களைப் பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியும் பயன்பெறலாம்.

    தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9943422198 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் 9488945801, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் தோட்டக்கலை உதவி இயக்குநர் -7299402881, பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் 8526616956/9944340793, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் தோட்டக்கலைஉதவி இயக்குனர் 9445257303 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال