No results found

    மகாபாவங்களை நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்


    நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.

    சாவித்திரி வேதமாதாச காயத்ரி சரஸ்வதி

    சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ

    சதாஸர்வார்த்தஸாதினீ

    சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச

    - கருடபுராண ஸ்லோகம்

    பொதுப் பொருள்: சாவித்திரியான தேவியே, வேதமாதாவான காயத்ரியே, சரஸ்வதியே, சங்க்ரியே, பிராம்மணி அம்மனே, எப்போதும் அனைத்துலகும் நலம்பெற  அருள்பவளே, ஆயிரம் நாமம் கொண்டவளே, உன் நாமங்களை சொல்வதினாலேயே பாவங்களைப் போக்குபவளே, உனக்கு நமஸ்காரம்.

    - நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை ஜெபம் செய்யும்போது ஒரு சொம்பு தண்ணீரை இடக்கரத்தில் ஏந்தி இம்மந்திரத்தை 3 தடவை உச்சரித்து, அந்த நீரைத் தலையில் கொஞ்சம் வலது கையால் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவை அருந்தியும் வந்தால் சிறந்த பலன்கள் கிட்டும். குளிக்கச் செல்லும் முன் தண்ணீரில் வலது நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை உச்சரிப்பார்கள். குறிப்பாக ஒவ்வொரு மாசிமாத மக நட்சத்திர தினத்தன்றும்.

    Previous Next

    نموذج الاتصال