தேவையான பொருட்கள்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
மிளகு - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு ப்ரை செய்ய
பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும். செட்டிநாடு மசாலா தூள் தயார்.
* அடுத்து பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு, உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கு மசாலா தூளுடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும்.
* இப்போது சூப்பரான செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை தயார்.