No results found

    உதடு வெடித்து கருத்து விட்டதா? இதோ இருக்கு தீர்வு தரும் சித்த மருந்துகள்...


    பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.

    அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

    இதனை கவனிக்கமால் விட்டால் இன்னும் கருப்பாக மாற்ற வாய்ப்பு இருக்கும். இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும்.

    தற்போது உதட்டு கருமை நீக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

    இதற்கான மருத்துவம்: பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ கரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கருப்பு நீங்கும். பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருப்பு நீங்கும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    Previous Next

    نموذج الاتصال